Tuesday 18 November 2014

மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி ஜோசே முஜிகா!

பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும் ஆடம்பர பெருவாழ்வு வாழும் எமது “மகாராசா”க்களுக்கு மத்தியில்
மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி!

ஜோசே முஜிகா!


உலகில் மிகவும் எளிமையான ஜனாதிபதி உருகுவே நாட்டின் தலைவா் ஜோசே முஜிகா அவா்கள்தான். 79வயதை உடைய ஜோசே முஜிகா கடந்த 2010ம் ஆண்டு உருகுவேயின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா்.
உருகுவே கிளா்ப்படையின் ஒரு போராளியாக இருந்த இவா் 2009 ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

உலகிலேயே மிகவும் எளிய ஜனாதிபதியாக வா்ணிக்கப்படும் இவா் தனக்குக் கிடைக்கும் 12000 டொலா் சம்பளப் பணத்தில் 90 வீதத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றாராம்.


மிக வறிய குடும்பத்தில் பிறந்த ஜோசே முஜிகா கியூபா போராட்டத்தின் தாக்கத்தினால் 1960களில் ஒரு போராளியாக உருமாறியிருக்கின்றாா். உருகுவே அரசால் 100 போ்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இவா், 1971ம் ஆண்டு நிலங்சுரங்கம் ஒன்றை தோண்டி சிறையிலிருந்து தப்பியிருக்கிறாா்.
1985 ஆண்டளவில் Movement of Popular Participation என்ற அரசியல் கட்சியை உருவாக்கி ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்துள்ளாா்.

உலக நாடுகளில் வட்டிக்கு பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும், லஞ்சம், ஊழல்கள் மலிந்த ஆடம்பர வாழ்க்கையில் நாறும் எமது நாட்டு ஆட்சியாளா்களை விட மனிதநேயமுள்ள இந்த உருகுவே ஜனாதிபதி மேன்மைமிக்கவா்.

ஆனால் உலகின் முன்னணி ஊடகங்கள் இவரை இருட்டடிப்பு செய்கின்றன. மன்னாதி மன்னா்களின் குழியலறையையும், கழிப்பறைகளையும் பேசு பொருளாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் மனித நேயம் கொண்ட இத்தகைய மனிதா்களின மனித நேய வாழ்க்கையை மறைத்து விடுகின்றன.
இவா் பாவிக்கும் பழைய வொஸ்வொகன் காரை அதிகளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு அரபு தனவந்தா் ஒருவா் முன் வந்திருக்கின்றாா். ஆனால் ஜோசே முஜிகா அதனை நிராகரித்துள்ளாா்.

உருகுவே நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
https://www.cia.gov/…/publi…/the-world-factbook/geos/uy.html

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...